தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி..!

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் விரைவில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News