சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கனல் கண்ணன் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் கிறிஸ்தவ மதபோதகர் உடையில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இளம்பெண்ணுடன் நடனம் ஆடிய வீடியோ காட்சியை எடிட் செய்து வெளியிட்டார். இது சர்ச்சை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான நிலையில் கனல் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.