தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமெலி. இவர், தற்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோரை வைத்து, புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு பிறகு, தனது கனவு படைப்பான மகாபாரதத்தை எடுப்பதற்கு, அவர் முடிவு செய்துள்ளாராம்.
இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, சினிமாவில் இருந்து ராஜமௌலி விலக முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது. இவரது இந்த முடிவு, திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.