நாகபட்டினம் மீன்பிடிக்க துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 15 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணம் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்தில் வைத்து யார்பாணம் மீன் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.