சபாநாயகர் நடுநிலையுடன் நடக்கவில்லை என்று எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமைச்செயலகம் வளாகத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு :-
விதி எண் 56ன் படி அவையை ஒத்திவைத்து விவாதிக்க தீர்மானம் கொடுத்தோம் விதியின் படி அதிமுக நடந்து கொண்டால் விவாதிக்கலாம் என்று சபாநாயகர் சொன்னார் ஆனால் இன்று விதிப்படி சபாநாயகர் நடக்கவில்லை.
சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் – கள்ளக்குறிச்சி பிரச்சனையின் ஆழத்தை கருதி விவாதிக்க அனுமதி கொடுத்திருக்க வேண்டும் ஆனால் சபாநாயகர் நடுநிலையுடன் நடக்கவில்லை கள்ளக்குறிச்சி பிரச்சனையை விட மிக்கியமான பிரச்சனை வேற என்ன இருக்கிறது?
திமுக இன்றைக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வருவதற்கு காரணம் ஓட்டு அரசியல்- விக்கிரவாண்டி தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு 5 மானிய கோரிக்கை என்று சம்பிரதாயத்திற்கு திமுக அரசாங்கம் பேரவையை நடத்துகிறது சாதிவாரி கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள அதிமுக அரசாங்கம் ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைத்தது ஆனால் திமுக. அரசாங்கம் இதனை தொடராதது ஏன் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.