மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்..!! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்கள்..!!

கார்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். மனைவி சிறுவயதிலேயே இறந்த நிலையில் சாந்தாவை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். ஆனால் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. மூத்த மனைவியின் முதல் மகள் ஹேமா என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன் கணேசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் கணேசன் மனைவியிடம் நெருங்கி பழக வில்லை என சொல்லப்படுகிறது..

இந்நிலையில் கணேசன் நேற்று மனைவியை வெளியே அழைத்து செல்வதாக கூறி., சென்னகிரி பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு கடைக்கு சென்று வருவதாக கூறி எஸ்கேப் ஆகியுள்ளார். நீண்ட நேரமாகியும் கணேசனை காணாததால் கடுப்பான ஹேமா வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால் அப்போதே மற்றொரு பேர் அதிர்ச்சி அவருக்கு அங்கு காத்திருந்தது.

அதாவது., அவரது வளர்ப்பு தாயான சாந்தாவையும், வீட்டில் இருந்த நகை பணத்தையும் காண வில்லை. இதனால் சந்தேக மடைந்த ஹேமா, தந்தை உதவியோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போதே பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

அதாவது சாந்தாவிற்கும், கணேசனிற்கும் பல ஆண்டுகளாக கள்ள காதல் இருந்துள்ளது. தன்னுடைய வளர்ப்பு மகளை, கணேசனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் இன்னும் நெருக்கமாக பழகி விட முடியும் என எண்ணிய சாந்தா. ஹேமாவிற்கு அவரை திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆனால் அவர்கள் இருவரும் நெருக்கமாக பழகியதுடன்., அடிக்கடி உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இதனை ஹேமா நேரில் பார்க்கவே கணவனிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் அதனை பொருட் படுத்தாத கணேசன், அத்தையுடன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். குட்டுதான் அம்பலமாகி விட்டதே இனி என்ன இருக்கு என நினைத்த அந்த கள்ள காதல் ஜோடிகள் நேற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்..

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் முத்தேனஹள்ளி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

RELATED ARTICLES

Recent News