தெரு நாய்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் – போலீசார் விசாரணை

தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் உள்ள பொன்னாகால் என்ற கிராமத்தில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் சுமார் 20 தெருநாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சில நாய்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முகமூடி அணிந்தபடி காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் தெருநாய்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News