ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா தொடரில் காமெடி ரோலில் நடித்தவர் சந்திரன். இவர் தற்போது மலர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருடைய மனைவி வைஷ்ணவி 25 ஆயிரம் ரூபாயை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தார். அதற்கு ஒழுங்காக பணம் வரவே கடன் வாங்கி ஒரு பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார்.

இதையடுத்து சந்திரனும் தனது வீட்டை அடமானம் வைத்து ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். ஆனால் அதற்கான பணம் வரவில்லை. இதன் காரணமாக சந்திரன் வீட்டை இழந்து தற்போது வாடகை வீட்டிற்கு வந்ததாகவும் கடனை கட்ட முடியாமல் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார்.