சென்னை கோயம்பேடு சந்தையில் எலிகள் கடித்த மற்றும் கெட்டுப்போன பழங்களை வைத்து குறைந்த விலைக்கு ஜூஸ் விற்பனை செய்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டை பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு ஜூஸ் கடை முழுவதும் அழுகிப் போன துர்நாற்றம் வீசியுள்ளது. கடைக்குள் சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் கோயம்பேடு சந்தையில் இருந்து எலிகள் கடித்த மற்றும் அழுகிப் போன பழங்களை வாங்கி குறைந்த விலையில் ஜூஸ் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் அந்த கடை உரிய அனுமதி இன்றி ஆவணம் ஏதும் இல்லாமல் நடத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.