ஈரான் அதிரடி தாக்குதல்..!! திணறும் இஸ்ரேல்..!! ரஷ்யா அதிபர் போட்ட உத்தரவு..!!

ஈரான் இஸ்ரேல் இடையே கடுமையான போர் தீவிரமடைந்துள்ளது. போரின் ஒரு பகுதியாக நேற்று ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியது. அதிலும் 200க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்து ஈரான் அதிரடி தாக்குதலை நடத்தியாக கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேலின் டெல் அவிவ் தலைநகர் பகுதி, விமான நிலையம் மற்றும் பேராலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் வேதனை தெரிவித்துள்ளது.

மேலும் பாதுகாப்பிற்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில்., ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்த முடியாத சூழல் உருவாகி இருப்பதாக இஸ்ரேல் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான போர் உருவாகியுள்ளது. இந்த போரில் அடுத்த 10-15 நாட்களுக்குள் இஸ்ரேல் முற்றிலுமாக அளிக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இதனிடையே ரஷ்யா அதிபர் புதின்., அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ரஷ்யா மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிமிட்ரி பெஸ்கோவ், ஈரான் அணுசக்தி நிலையங்கள், மற்றும் ராணுவ நிலையங்கள் மீது இஸ்ரேல் “ஆப்ரேஷன் ரைசிங் லயன்” என்ற பேரில் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது.

மேலும் இந்த தாக்குதலில் முப்படை பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்பதற்காகவே இஸ்ரேல் மீது “ஆப்ரேஷன் ட்ரு பிராமிஸ்-3” என்ற பெயரில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி., உயிருடன் இருக்க கூடாது என இஸ்ரேல் கூறியதை சுட்டிக்காட்டி., அமெரிக்க தாக்குதலில் ஈடுப்படவுள்ளது கண்டனத்திற்குரியது என்றார். மேலும் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் இஸ்ரேலுக்கு., அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அணு ஆயுதத்தை கிடைக்கவிடாமல் செய்து., தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக சாடினார்.

RELATED ARTICLES

Recent News