ஜாதி வெறியை தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘இராவணக்கோட்டம்’ திரைப்படத்தை முதலமைச்சர் தடை செய்ய வேண்டும். மீறி திரையிட்டால் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ் எச்சரித்துள்ளார்.
திரைப்பட இயக்குனர் தனது ஜாதி பெருமையை கூறிக் கொள்ளவும் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் பிற ஜாதி கட்சி தலைவர்கள் குறித்து தவறான தகவல்களை திரைப்படமாக எடுப்பதாக குற்றம் சாட்டினார்.

அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில், ஜாதி வெறியை ஊக்குவிக்கக்கூடிய இது போன்ற திரைப்படங்களை தமிழக முதலமைச்சர் தடை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் மீண்டும் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள ‘இராவணகோட்டம்’ திரைப்படத்தை வெளியிட தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார். மீறி உத்திரையிட்டால் 12ஆம் தேதி இந்த திரைப்படங்கள் வெளியாக கூடிய திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தார்.