தொண்டா்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி : பிரேமலதா விஜயகாந்த்..!

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இறப்பிற்கு இன்றவும் பலா் அஞ்சலி செலுத்திவருகின்றனா்.இந்நிலையில், நேற்று நேரில் சென்ற பாதிபோ் விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்த முடியாமல் போனது.

அடக்கம் செய்யப்பட்ட இரண்டாவது நாளான இன்று , பொதுமக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்த அனுமதி என பிரேமலதா விஜயகாந்த் அவா்கள் தெரிவித்துள்ளாா். மேலும், தொண்டா்கள் வழிபடும் நினைவிடமாகவும், அணையா தீபம் ஒன்று ஏற்றிவைக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

பின்னா் இன்று தனது குடும்பத்துடன் மரியாதை செலுத்திய பிரேமலதா, செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா்.அதில் அவா் கூறியதாவது, விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படும். தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது இடத்தில் மணிமண்டபம், சிலை வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம், விஜயகாந்த் லட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம், விஜயகாந்த் விட்டுச்சென்ற பணிகள் நிறைய உள்ளது, அதனை தொடர்வோம் என்று தெரிவித்துள்ளாா்.

RELATED ARTICLES

Recent News