TNPSC தேர்வில் முடிசூடும் பெருமாள் என்ற வைகுண்டரின் பெயரை, “the god of hair cutting” என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் பாமக அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்..
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த TNPSC தேர்வில் முடிசூடும் பெருமாள் என்ற வைகுண்டரின் பெயரை, “the god of hair cutting” என்று மொழி பெயர்கப்பட்டிருந்து இதனை சுட்டிக்காட்டி பாமக அன்புமணி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்., ஐயா வழி என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கிய சாமித்தோப்பு ஐயா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வுகளில் அவரை முடிவெட்டும் கடவுள் என குறிப்பிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலட்சியம் காட்டியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்
ஆங்கில மொழிபெயர்ப்பில் முடிசூடும் பெருமாள் என்பதை “Vishnu with a crown” என்று மொழிபெயர்ப்பதற்கு பதிலாக ‘the god of hair cutting’ என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர். இது அவரது வழியை பின்பற்றுபவர்களின் உணர்வுகளையும் காயப்படுத்துவதாக வேதனை தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு சாதாரண சொல்லைக் கூட சரியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாத நிலையில் இயங்கி வருவதாக கடுமையாக சாடினார்.
மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அந்த வினாவுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்..