அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன். 82 வயதான இவர், தனக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுதொடர்பாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும், புற்றுநோய் செல்கள், அவரது எலும்புகளுக்கும் பரவி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜோ பைடனின் உடல்நலம் குறித்து, மிகுந்த வருத்தம் அடைந்ததாகவும், அவர் உடல்நலம் விரைவில் சரியாக வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார்.