திருநங்கை செய்தி வாசிப்பாளர் மீது துப்பாக்கி சூடு..!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மர்வியா மாலிக் (26) கடந்த 2018-ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார். மேலும் இவர் அந்நாட்டின் திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் லாகூர் நகரில் இரண்டு நபர்கள் மர்வியா மாலிக் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மர்வியா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து போலீசாரிடம் தெரிவித்த அவர் ஏற்கனவே தனக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு பயந்து சில காலம் லாகூரை விட்டு தள்ளி இருந்ததாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News