படைத்தலைவன் படம் எப்படி இருக்கு..? புலிக்கு பொறந்தது பூனையா..?

கேப்டன் விஜயகாந்திற்கு பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் ஆர்வம் கொண்டவர். கடந்த 2015ம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் ஆனால் அந்த படம் நல்ல வரவேற்பை பெறவில்லை . அதன் பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார் ஆனால் அந்த கட்டத்தில் பீட்டா எதிர்ப்பு காரணமாக இப்படம் வெளியாகவில்லை.

கம்பேக் என்றால் இப்படி தான் இருக்கும் என சொல்லும் அளவிற்கு., 10 ஆண்டுகளுக்கு பின் சண்முக பாண்டியன் கம்பேக் கொடுத்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில், அறிமுக இயக்குநர் அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் யாழினி சந்திரன், கஸ்தூரி ராஜா, முனிஷ்காந்த், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கதையின் சுருக்கம் :

சண்முக பாண்டியன் (வேலு) என்கிற கதாப்பாத்திரத்தில் இதில் நடித்துள்ளார். தன்னுடைய சிறு வயதில் இருந்தே யானை ஒன்றை குடும்பத்தில் ஒருவராக வளர்த்து வருகிறார். ஒருநாள் திடீரென யானைக்கு மதம் பிடிக்க., ஊரில் உள்ளவர்களை தாக்குகிறது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ யானையை முகாமில் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட யானை திடீரென காணாமல் போக., அதனை வேலு தேடி செல்கிறார். அப்போது நடக்கும் சுவாரசியமனா விஷயங்களே கதையாக்கப்பட்டுள்ளது. முடிவில் யானைக்கு மதம் பிடித்தே இருக்கிறதா இல்லை முகாமில் ஒப்படைக்கப்பட்டதா., இல்லை வேலு தன்னுடைய வீட்டிற்கு கூட்டி சொல்கிறாரா என்பது படத்தின் ட்விஸ்ட்..

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என கேட்கும் அளவிற்கு., அப்பாவை போலவே மகனும் சண்டை காட்சிகளை மாஸ் செய்து விட்டார் என சொல்லலாம். காதல் காட்சிகள் குறைக்கப்பட்டிருந்தாலும்., சண்டை காட்சிகளுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 படங்களில் ஹிட் கொடுக்க வில்லை என்றாலும் இந்த படம் ஹிட் கொடுக்கும் என்பது ரசிகர்களின் கருத்து..

RELATED ARTICLES

Recent News