பிப்ரவரி 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் பிப்ரவரி 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த அமைப்பினர் வரும் பிப்ரவரி 26-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த சூழலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஊழியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

வரும் பிப்ரவரி 22 முதல் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், பிப்ரவரி 27-ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வருவாய்த் துறை பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News