கடந்த ஜூன் 5ம் தேதி., மணிரத்தினம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், நடிகர் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா மற்றும் அபிராமி போன்றோர் நடிப்பில் வெளியான் திரைப்படம் தான் “தக்லைப்”.. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்க பெரும் ஏமாற்றத்தை கொடுத்த படமாக இப்படம் அமைந்துள்ளது..
இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது “தமிழில் இருந்து தான் கன்னடன் தோன்றியது” என இவர் கூறிய கருத்து கர்நாடக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது..
தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த நிலையில்., கமல்ஹாசனிடம் கர்நாடக வர்த்தக சபை மன்னிப்பு கேட்க கோரி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு கமல் ஹாசன் மறுப்பு தெரிவித்த நிலையில் இப்படத்தை கர்நாடகாவில் வெளியிட வர்த்தக சபை தடை விதித்திருந்தது.
இதனை எதிர்த்து மகேஷ் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையில் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி.,
ஒரு திரைப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்துவிட்டால், அப்படத்தை எவ்வித தடையுமின்றி திரையிட வேண்டுமென்றும் அதன் பாதுகாப்பை அரசே உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார் போல் மனுதாக்கல் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.
மேலும் திரைப்படத்தை வெளியிட ஒருவருக்கு முழு அதிகாரம் உண்டு என்றும்., CBFC சான்றிதழ் உள்ள ஒருபடத்தை திரையிட கூடாது என கூற எவருக்கும் உரிமம் இல்லை என்றும் படம் வெளியான பின்னர் அவற்றை தடை செய்வது ஏற்புடையதல்ல என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீதிபதி கூறியதை தொடர்ந்து இப்படம் கர்நாடகாவில் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.