ஒரு கோடி ரூபாய் கடனை தீர்த்து வை முருகா! – கோயில் உண்டியலில் கிடைத்த கடிதம்!

தருமபுரி குமாரசாமிப்பேட்டயைில் சிவசுப்பிரமணியர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, காணிக்கைகளுக்கு மத்தியில் ஒரு வெள்ளைக் காகிதம் ஒன்று இருந்துள்ளது.

அதில், பெயர் குறிப்பிடப்படாமல் பக்தர் ஒருவர் தன்னுடைய கடன் குறித்த விவரங்களை எழுதி இருந்தார். மேலும் இந்த கடன்கள் அனைத்தும் விரைவில் அடைய வேண்டும் என்றும், தனக்கு வர வேண்டிய பணமும் சீக்கிரமாக வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக, கடிதத்தின் இறுதியில், காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க, என்ற கந்த சஷ்டி கவசத்தின் சில வரிகளையும் எழுதி, முருகா முருகா ஓம் முருகா, கடன் அடைய வேண்டும் முருகா என்று மனமுருகி கோரிக்கை வைத்துள்ளார். இந்த பக்தரின் கடிதம் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News