குழந்தையை கொல்ல துணிந்த கொடூர தாய்..!! போலீசில் சிக்கியது எப்படி..?

நாட்டில் காதலர்கள் அதிகரித்து வருவதை விட கள்ள காதலர்களே அதிகரித்து வருகிறார்கள் என சொல்லலாம். அந்த கள்ள காதலுக்காக சிலர் கணவன், மனைவி, பெற்ற குழந்தைகளை கொல்ல துணிவது தான் வேதனை அளிக்கிறது.. அப்படி தான் இந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹசான் மாநிலத்தை சேர்ந்தவர் சைத்ரா. இவர் கஜேந்திரா என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக கணவரிடம் வெறுப்புடன் நடந்துக்கொண்டதாகவும்., செல்போனில் மற்றவர்களுடன் சிரித்து பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.. மனைவியின் நடத்தையில் மாற்றத்தை உணர்ந்த இவர்., அப்பெண்ணின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.

அப்போது சைத்ரா, புனித் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது., மேலும் அவர்கள் தனிமையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்களையும் கஜேந்திரன் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதற்கு கட்டுப்பாடாத சைத்ரா அப்பகுதி காவல் நிலையத்தில் கணவன் கொடுமை செய்வதாக கூறி புகார் அளித்துள்ளார். இதனை நம்பிய காவலர்களும் கஜேந்திரனை அடித்து உதைத்து சிறையில் அடைந்துள்ளனர்.

இந்த விவகாரமெல்லாம் கள்ளகாதலனுக்கு தெரிய வர, சைத்ராவிடம் இருந்து கம்பி நீட்டியதாக சொல்லப்படுகிறது. பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த கஜேந்திரன்., மனைவியிடம் புதுவாழ்க்கை தொடரலாம் எனவும்., இனி இதுப்போன்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுரைக் கூறியுள்ளார்.

இதன் பின்னரே பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. கடந்த சில நாட்களாக கஜேந்திரன், அவரது பிள்ளைகள் மற்றும் பெற்றோர் என அனைவருக்கும் ஒருவித உடல்வலி, சோர்வு மற்றும் தூக்க பிரச்சனைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சனைகள் எப்படி வரும் என ஆராய்ந்த போது., சைத்ராவின் பையில் இருந்து சில மாத்திரைகள் கிடைத்துள்ளது. அதை மருந்தகத்தில் சென்று விசாரித்த போது அவை ஸ்லோ பாயிசன் என்பது தெரியவந்தது..

இதனை அடுத்து சைத்ரா மீது அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்., அதில் போலீசார் நடத்திய விசாரணையில்., பக்கத்து வீட்டை சேர்ந்த ஷிவு என்பவருடன் மற்றுமொரு கள்ளதொடர்பில் இருந்ததும் அவருடன் வெளி ஊர் செல்ல நினைத்த போது., ஷிவு குடும்பத்தினரை கொல்ல திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த மாத்திரைகளை ஷிவு பரிந்துரைப்படி இணையதளத்தில் இருந்து வாங்கியது தெரியவந்தது. இதனை அடுத்து., ஷிவு மற்றும் சைத்ரா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கஜேந்திரன் குடும்பத்தினருக்கு தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இந்த சம்பவம் ஹசான் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

RELATED ARTICLES

Recent News