சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக்.15) கனமழையும், நாளை அதி கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி, “காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து முனையங்களில் இருந்தும் காலை 5 மணிக்கு முதல் ரயிலும் இரவு 11 மணிக்கு கடைசி ரயிலும் இயக்கப்படும்.
நாள்தோறும் 42 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இன்று 47 ரயில்கள் இயக்கப்படுகிறது.
பச்சை நிற வழித்தடத்தில் (சென்ட்ரல் பரங்கிமலை) 5 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், நீல நிற வழித்தடத்தில் (விமான நிலையம் விம்கோ நகர்) 6 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் வண்ணாரப்பேட்டை ஆலந்தூர் வரையில் 3 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சேவையை பயணிகள் பயன்படுத்தி, இதற்கேற்ப திட்டமிடலை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”