3 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (அக்.15) கனமழையும், நாளை அதி கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, “காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து முனையங்களில் இருந்தும் காலை 5 மணிக்கு முதல் ரயிலும் இரவு 11 மணிக்கு கடைசி ரயிலும் இயக்கப்படும்.

நாள்தோறும் 42 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், இன்று 47 ரயில்கள் இயக்கப்படுகிறது.

பச்சை நிற வழித்தடத்தில் (சென்ட்ரல் பரங்கிமலை) 5 நிமிடத்துக்கு ஒரு ரயிலும், நீல நிற வழித்தடத்தில் (விமான நிலையம் விம்கோ நகர்) 6 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் வண்ணாரப்பேட்டை ஆலந்தூர் வரையில் 3 நிமிடத்துக்கு ஒரு ரயிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சேவையை பயணிகள் பயன்படுத்தி, இதற்கேற்ப திட்டமிடலை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

RELATED ARTICLES

Recent News