அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவா தான் வருவேன் என்று பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மேகா ஆகாஷ்.
இவருக்கும், சாய் விஷ்ணு என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த ரசிகர்கள், யார் இந்த சாய் விஷ்ணு என்று தேடி வந்தனர்.
இந்நிலையில், இவர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ரஜினிகாந்தின் காலா, கபாலி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் இந்த சாய் விஷ்ணு-வாம்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்காரசரின் மகனான இவர், தற்போது சினிமாவில் இருந்து விலகி, சுயதொழிலில் கவனம் செலுத்தி வருகிறாராம்.