தேன்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வன சரகத்திற்கு உட்பட்ட பனைகாப்பு காட்டில் இருந்து நேற்று இரவு வெளியேறிய, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, பாலதொட்டனப்பள்ளியிலிருந்து சாவரபெட்டா செல்லும் சாலை அருகே லோகேஷ் என்பவரது பசுமை குடில் அருகே தாழ்வாக சென்ற போது உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது உரசியதில் யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருவதுடன் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த பகுதிகளில் பெரும்பாலும் ஏராளமான உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து தொங்குவதுடன் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டிருப்பதால் இது போன்ற மின் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இவற்றை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.