சிறுமியை தூக்கி சென்ற சிறுத்தை..!! கண்ணீரில் தாய்..!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட்டில் தொழிலாளர் குடியிருப்பு பகுதி உள்ளது. அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மணோஜ் முந்தா மோனிகா தேவி ஆகியோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களது 4 வயது மகள் ரோசினி ., நேற்று மாலை 6 மணியளவில் குடியிருப்பு முன்பு விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து குழந்தையின் கழுத்தை பிடித்து தேயிலை தோட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளது.

இதனை கண்ட சிறுமியின் தாய் கத்தி கூச்சலிட்டுள்ளார்., அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர்., வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் சிறுத்தையின் கால் தடங்களை வைத்து சிறுமியை தேடி வந்த நிலையில்., தற்போது சிறுமியின் சடலத்தை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் தாயின் கண்முன்னே சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

RELATED ARTICLES

Recent News