பாலியன் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு: தந்தையும் விபத்தில் பலி!

கிருஷ்ணகிரி மாணவிகள் பாலியில் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி இருந்த சிவராமன் உயிரிழந்த நிலையில் அவரது தந்தையும் உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 8-ம் வகுப்பு மாணவியை போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் சிவராமன், 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மொத்தம் 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து, அவர் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனால் சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முக்கிய குற்றவாளி சிவராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், உயிரிழந்த சிவராமனின் தந்தை அசோக்குமார் காவேரிப்பட்டினம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News