தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் கிரன். தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. சைபர் க்ரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான அதிகாரிகள், நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்த மாதிரியான வீடியோக்களை, பகிர்வதும், டவுன்லோட் செய்வதும், தகவல் தொழில்நுட்ப சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது.
இந்த விஷயங்களில், மறைமுகமான முறையில் ஈடுபட்டிருந்தாலும், சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ளுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.