பாராசிட்டமால் மாத்திரைகள் குறைந்த தரத்துடன் தயார் செய்யப்படுவதால்., அவற்றை தடை செய்யக்கோரி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது..
பாராசிட்டமலின் 650 வகை மாத்திரைகளுக்கும் 14 வகை மருந்துகளும் பயன்படுத்த கர்நாடக சுகாதார துறை தடை விதித்துள்ளது.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் மாத்திரைகளில் “பாராசிட்டமால் ” ஒன்று., காய்ச்சல், தலைவலி, உடல்வலி என எந்த நோயாக இருந்தாலும் மக்கள் முதலில் தேடி செல்வது பாராசிட்டமால் மாத்திரையை தான்.
இந்நிலையில் மாத்திரையின் தரம் குறைந்து விட்டதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்துவந்து நிலையில் கர்நாடக சுகாத்துறை அரசு பரிசோதனை மேற்கொண்டது. அதில் 650 வகை மாத்திரைகளுக்கும் 14 வகை மருந்துகளும் தரம் குறைவாக இருப்பது உறுதியானது.
இதனை தொடர்ந்து இந்த மாத்திரைகளை தயார் செய்யும் 14 வகை நிறுவங்களுக்கும் தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது..
தடை செய்யப்பட்டுள்ள மாத்திரைகள் :
- கூட்டு சோடியம் லாக்டெட் ஊசி ஐ.பி.,
- கூட்டு சோடியம் லாக்கெட் ஊசி ஐ.பி., – ஆர்.எல்.,
- பாராசிட்டமால் 650 மாத்திரை.
- மிட்கியூ 7 சிரப்.
- கோழிகளுக்கு போட பயன்படுத்தப்படும் என்.டி., – ஐ.பி., – ஐ.பி.டி., கூட்டு தடுப்பூசி.
- ஸ்பான்பிளாக்ஸ் ஓ.டி.மாத்திரைகள்.
- பான்டோகாட் – டி.எஸ்.ஆர்.,
- சோடியம் குளோரைடு ஊசி ஐ.பி., 0.9
- ஆல்பா லிபோயிக் அமிலம்.
- ஓம் சாந்தி கோல்டு கிளாஸ் குங்குமம்.
- பைராசிட் ஓரல் சஸ்பென்ஷன்.
- கிளிமிஸ்- 2.
- அயர்ன் சுக்ரோஸ் ஊசி யு.எஸ்.பி.,
- சோடியம் லாக்டேட் ஊசி ஐ.பி.,
மேலும், மேற்கண்ட மாத்திரைகளை பயன்படுத்திய பொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும்., தங்களுக்கு ஏதேனும் இருப்பு இருந்தால் மட்டும் ஒரு மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ளும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது..