கள்ளக்குறிச்சி விஷச்சாரய பலி எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 20 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 10-பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
நேற்று வரை 8- பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த வந்த மாடூர் திருவரங்கம் பகுதியை சேர்ந்த கண்ணண் (72) சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயரந்துள்ளது. தொடர்ந்து மோகன் (50) என்பவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதுவரை கள்ளக்குறிச்சி விஷச்சாரய பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.