கடந்த சில நாட்களாக பாமக நிறுவனம் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் தன்னுடைய தலைவர் பதவியை ஒருபோதும் அன்புமணிக்கு வழங்கமாட்டேன் என ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்., வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தலைவர் பதவியை தனது மகன் அன்புமணிக்கு கொடுக்க இருந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நடத்தப்பட்ட மாநாடு மற்றும் அவரது பேச்சு மற்றும் செயல்பாடுகளை பார்த்து தலைவர் பதவியை கொடுக்க நினைத்தது தன்னுடைய தவறு என சாடினார். மேலும் பேசிய அவர், தன்னுடைய மூச்சு காற்று அடங்கும் வரை ஒருபோதும் தலைவர் பதவி வழங்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது செயல்களை கண்டு தனக்கு மனஅழுத்தம்., மனக்குமுறல், BP அதிகமாகிவிட்டதாகவும் வேதனை தெரிவித்தார்.
கட்சி தொடங்கியபோது., குடும்பத்தில் உள்ள பெண்களை அரசியலில் ஈடுபடுத்தக்கூடாது என தான் கூறியதை சுட்டிக்காட்டி, அன்புமணி இதனை மீறி செயல்படுவதாக வேதனை தெரிவித்தார். மேலும் இந்த தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்குவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த நிலையில்
100க்கு 99% பேர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பதவி வழங்க சிந்தித்தாகவும்., தற்போது அந்த சிந்தனைகளை அன்புமணி உடைத்துவிட்டார் என குற்றம்சாட்டினார்.
அன்புமணி ராமதாஸிற்கு ஒன்றிய அமைச்சரவை பதவி கொடுக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே தன்னுடைய பதவி அவர் ராஜினாமா செய்ததை சூட்டிக்காட்டி., தாய் தந்தையை மதிக்காதவர் எப்படி மக்களுக்காக உழைப்பார் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர்., தன் மகனை நினைத்து வருந்துவது பாசத்தினால் மட்டுமல்ல அல்ல என்றும் செயல்தலைவராக இருந்து தன்னோடு பயணித்து மக்கள் சேவையை தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.