போர் நிறுத்தத்திற்கு பின்னும் தாக்குதல்..!! ஈரான் மறுக்க காரணம்..!!

இஸ்ரேல் ஈரான் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த மோதல் 12 நாட்களுக்கு பின் முடிவிற்கு வந்துள்ளது.

கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேல்., ஈரானின் ராணுவ மற்றும் அணுஷக்தி தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில்., தீவிர மோதல் ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை நடத்தியது. இதனிடையே இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அமெரிக்கா களம் இறங்கி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது அப்போது ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்க முடிவு செய்திருந்தது.

இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் தொடங்கிய நிலையில்., ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் ஈரான் தரப்பில் ஒரு பதில் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே போர் நிறுத்ததிற்கு ஒப்புக்கொள்வோம் என இஸ்ரோ அறிவித்ததாக தகவல்கள் வெளியானது.

அதன்படி அந்த அறிவிப்பு வெளியான 2 மணி நேரத்திற்கு பின் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் தான் ஆரம்பத்தில் போரை நடத்தியதாகவும்., ஈரான் போர் நடத்தவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் போர் நிறுத்தம், அறிவிக்கப்பட்ட பின்னரே போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் தங்களது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்..

RELATED ARTICLES

Recent News