இஸ்ரேல் ஈரான் இடையே கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க மத்திய கிழக்கில் உள்ள இராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் அதற்கான காரணங்கள் குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில்., அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி காமெனி அமெரிக்காவின் தளவாடங்கள் மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்..
முன்னதாக அமெரிக்க ராணுவம் மூன்று டஜன் வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்களை ஐரோப்பாவிற்கு அனுப்பிய நிலையில் கடும் கோபமடைந்த ஈரான். இந்த பதில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.