விண்வெளியில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா நெகிழ்ச்சியாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ., வருகின்ற 2027ம் ஆண்டிற்குள் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த ககன்யான் திட்டமானது மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து சென்று மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கம்.
அத்திட்டத்தின் முதற்கட்ட நோக்கமாக சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் டிராகன் என்ற விண்கலம் மூலம் நேற்று (இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு) விண்ணுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவருடன் அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எல்லோருக்கும் வணக்கம் (நமஸ்கார்) இந்த பயணம் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. இந்த பூஜ்ஜிய ஈர்ப்பு விசையினால் தன்னை ஒரு குழந்தையை போல உணர்கிறேன். அதாவது நடப்பதற்கு நகர்வதற்கு என அனைத்து செயல்களும் குழந்தையை போல உணர வைக்கிறது. என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ஆனால் முதன் முதலாக ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி பயணம் மேற்கொண்டவர் வீரர் “ராகேஷ் ஷர்மா”.