விண்வெளி செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா..!! யார் இந்த சுபான்ஷு சுக்லா..?

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ., வருகின்ற 2027ம் ஆண்டிற்குள் ககன்யான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. இந்த ககன்யான் திட்டமானது மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து சென்று மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே இத்திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டத்தின் முதல் விண்கலமானது., கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும்., ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் இணைந்து அனுப்பி வைத்தது. இதனை தொடர்ந்து ஆக்சியம் 4 என்ற பெயரில் 4வது விண்கலத்தை விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது.

திட்டமிட்ட படி, ஜூன் 10ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் என்ற விண்கலம் ஏவப்பட்டது.

ஆனால் அவை சில தொழில்நுட்பம் மற்றும் வானிலை காரணமாக அத்திட்டம் அன்று செயல்படுத்த முடியவில்லை. பின்னர் ஜூன் 11ம் தேதி இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில்., திரவ ஆக்சிஜன் கசிவால் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த இஸ்ரோ முன்வந்துள்ளது. இதில், அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் இதில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அந்த வகையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளார்.

இந்த விண்கலமானது 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்றும்., அவர்கள் அங்கு 14 நாட்கள் தங்குவார்கள் என நாசா தெரிவித்துள்ளது. மேலும் பால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட திரவ ஆக்சிஜன் கசிவை ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் சரிசெய்துள்ளதால் இத்திட்டம் இந்தமுறை கட்டாயம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News