கடந்த 2023-ஆம் ஆண்டில் நாய் கடித்து 286 பேர் உயிரிழப்பு!

கடந்த 2023-ம் ஆண்டில் 286 பேர் நாய்க்கடியால் இறந்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் எழுத்து மூலம் அளித்த பதில்:

மத்திய சுகாதார அமைச்ச கத்தால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட புள்ளிவிவரப்படி கடந்த 2023-ம் ஆண்டில் நாய்க்கடி தொடர்பாக மொத்தம் 30,43,339 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 286 பேர் நாய்க்கடியால் இறந்துள்ளனர்.

விலங்குகளால் ஏற்படும்நோய்களை கட்டுப்படுத்தமாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதியை ரேபிஸ் தடுப்பூசிக்கும் மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு ராஜீவ் ரஞ்சன் சிங் கூறினார்.

RELATED ARTICLES

Recent News