மத்திய பிரதேச மாநிலம், போபாலின் புறநகர் பகுதியான பர்வாலியா-வில் ‘ஆன்சல்’ என்ற பெண்கள் விடுதி உள்ளது. இங்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய (என்.சி.பி.சி.ஆர்) தலைவர் பிரியங்க் கனுங்கோ, திடீர் ஆய்வுக்கு சென்றுள்ளாா். அப்போது, அங்குள்ள பதிவேட்டை சரிபார்த்தபோது, மொத்தம் உள்ள 68 சிறுமிகளில் 26 பேர் காணாமல்போனது தெரியவந்தது.
இதில் காணாமல்போன சிறுமிகள் குஜராத், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், இது குறித்து விடுதி இயக்குநர் அனில் மேத்யூவிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர் உரிய முறையில் பதிலளிக்கவில்லை. இதனால் ,உள்ளூா் போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
कल मध्यप्रदेश की राजधानी भोपाल के तारासेवनिया में राज्य बाल आयोग अध्यक्ष व सदस्यों के साथ संयुक्त रूप से एक मिशनरी द्वारा संचालित अवैध बाल गृह का निरीक्षण किया।
— प्रियंक कानूनगो Priyank Kanoongo (@KanoongoPriyank) January 5, 2024
यहाँ की संचालक NGO हाल तक सरकारी एजेन्सी की तरह चाइल्ड लाइन पार्ट्नर के रूप में कार्यरत रही है,एवं इसने सरकारी… pic.twitter.com/yVlWt04c90
அதன்படி, போலீஸார் நடத்திய விசாரணையில், சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த இந்த பெண்கள் விடுதியில் பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த விடுதியில் 6 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுமிகள் வசித்து வந்ததாகவும், இந்து மதத்தை சேர்ந்த அவர்கள், கிறிஸ்துவத்தை பின்பற்றும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் என்.சி.பி.சி.ஆர் தலைவர் பிரியங்க் கனுங்கோ குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.