குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம் லண்டன் நோக்கி சென்றது. அதில் 242 பேர் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதன் உதறி பாகங்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது என்று சொல்லலாம்.
இந்த விமான விபத்தில், குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிர் இழந்துள்ளதாக
ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் விஷ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் இந்த விபத்தில் உயிர் இழந்துள்ளதார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி விபத்து நேர்ந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பயணி விஷ்வாஸ் குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தார்.
விமானம் வானில் பறக்கப்பட்ட சில நிமிடங்களிலியே., விமான கட்டுப்பாட்டு அறை (Control Room)-ற்க்கு “மே-டே” என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், பைலட்களை தொடர்பு கொள்ள முற்பட்ட போது, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் உதவிட முடியவில்லை என அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது..