செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: வரும் 10-ம் தேதி தொடக்கம்!

சென்னையில் 3-வது முறையாக மலர் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் வரும் 10-ம்தேதி தொடங்குகிறது.

கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து மலர்கள் எடுத்து வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் அன்னப்பறவை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட உள்ளது.

10 லட்சம் மலர்கள் கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், சுமார் ஒரு வாரம் வரை கண்காட்சி நடைபெறலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

RELATED ARTICLES

Recent News