வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 240 பயணிகளுடன் கோவா நோக்கி வந்த சார்ட்டர் விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் அவசரமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: “அஷூர் விமான போக்குவரத்து நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் விமானம் (AZV2463) ஒன்று மாஸ்கோவில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 4:15 மணிக்கு கோவாவின் டாம்போலி விமான நிலையத்தில் தரையிறங்கியிருக்க வேண்டும். இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக 12:30 மணிக்கு டாம்போலி விமானநிலையத்தின் இயக்குநருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாக, அவசர அவசரமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News