பணியின் போது காவலர் உயிரிழப்பு..!! சக காவலர்கள் ஒன்றிணைத்து நிதியுதவி அளிப்பு…!!

தமிழ்நாடு காவல்துறையில் தமிழகம் முழுவதும் இருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு 6 ஆயிரம் பேர் பணியில் சேர்ந்தனர். இந்த காவலர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ் ஆப் குழு அமைத்து உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்த மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் தலைமை காவலராக பணியாற்றிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் உடல் நில குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் வாட்ஸ் ஆப் குழு மூலம் வழங்கிய நிதியாக சுமார் 24 லட்ச ரூபாயை காவலர் விக்னேஷ்ன் மனைவி ஸ்டெபிகிராப்பிடம் வழங்கும் நிகழ்ச்சி மன்னார்குடியில் இன்று நடைபெற்றது. இதில் காவலர் விக்னேஷ் க்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்த காவலர் விக்னேஷின் தாயார் மனைவி அவரது இரண்டு மகன்களின் பெயரில் காசோலையாக வழங்கப்பட்டது..

RELATED ARTICLES

Recent News