பீடி தராத தந்தை; ஆத்திரத்தில் கல்லை போட்டு கொலை செய்த மகன்!

பீடி தராத தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் எம்.கே.பி நகர் பகுதியில் மகேந்திரன் (55) என்பவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மகேந்திரன் மகன் அருண் (28) சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் இந்நிலையில் தனது தந்தையிடம் பீடி தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு மகேந்திரன் தர மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த அருண் வீட்டின் அருகில் இருந்த கல்லை எடுத்து மகேந்திரன் தலை மீது போட்டதில் இரத்த வெள்ளத்தில் அவர் இறந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

மேலும், அருணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு போது சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

RELATED ARTICLES

Recent News