தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த ஆண்டு முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி இந்த ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா 3கட்டமாக இன்று சென்னயை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த முறை சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்க தவெக கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னை, அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், மற்றும் வேலூர் என 88 தொகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அக்கட்சியின் தலைவர் விஜய் சால்வை அணிவித்து விருது வழங்கினார். இரண்டாம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் வழங்கப்பட்டது.
தற்போது மூன்றாம் கட்ட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் 51 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருதுகளை வழங்கி வருகிறார். இதில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் மாணவிகள் உற்சாகமாக விருதுகளை பெற்று செல்கின்றனர்.
முன்னதாக பேசிய தலைவர் விஜய்,, அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன்னை காமராஜர் என அழைக்க வேண்டாம் என்றும்.. தன்னை விஜய் என்ற பெயரை தவிர மற்ற தலைவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.