டந்த 2013ம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் “அட்லீ “. முதல் படம் பயங்கர ஹிட் என சொல்லலாம். முதல் படம் மட்டும் ஹிட் அல்ல நான் எடுக்கும் எல்லாம் படமும் ஹிட் என சொல்லும் அளவிற்கு இவர் எடுத்த அனைத்து படங்களும் நல்ல ஹிட் அடித்த படங்கள் என சொல்லலாம்.
தெறி., மெர்சல்., பிகில் மற்றும் ஜவான் என அடுத்த 4 படங்களை இயக்கி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார். குறிப்பாக இவர் இயக்கிய ஜவான் திரைப்படம் உலகளவில் 1100கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.. மேலும் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுனை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில், இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது மேடையில் அட்லீ பேசியது அரங்கத்தையே அதிர செய்துள்ளது.
மேடையில் அட்லீ பேசியாதாவது., தான் இதுவரையில் எடுத்த அனைத்து படங்களுமே கண் முன்னே பார்த்த கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்டதாக கூறினார். குறிப்பாக மெர்சல் திரைப்படத்தில் வரும் ராயப்பன் கதாப்பாத்திரம் “J.P.R-யை” வைத்து எழுதியதாகவும்., பல ஏழை மாணவர்களின் படிப்பு மற்றும் விளையாட்டிற்கு உதவியதாக புகழ்ந்து பேசினார்.
தன்னை ஒரு நல்ல மனிதனாக மாற்றியது தன்னுடைய மகன் என்றும்., தன்னுடைய வெற்றிக்கு பின்னால் அவருடைய மனைவி பிரியா மற்றும் பெற்றோர் இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்., இவர்களை போல தன்னுடைய வெற்றிக்கு பெரும் காரணமாக இருந்தவர் என்னுடைய அண்ணன் “தளபதி விஜய்” என்று பெயரை சொன்னதும் மாணவர்களின் கர ஓஷங்கள் மற்றும் சத்தங்களால் அரங்கமே அதிர்ந்தது. பின்னர் அட்லீ நன்றி நண்பா அவருடைய பெயரை சொல்லிய பின் வரும் சத்தமும் கை தட்டல்களும் அவருடையது என்பதால் தான் விடைப்பெறுவதாக கூறி மேடையில் இருந்து கீழே இறங்கினார்.