கடன் பிரச்சனை: முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு விசைத்தறியாளர் தற்கொலை!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவருக்கு விசைத்தறி தொழிலாளி கடந்த மூன்று ஆண்டுகளாக தொழில் நலிவடைந்ததால் குடும்ப சூழ்நிலையை சமாளிக்க பல்வேறு பகுதியில் அதிக வட்டிக்கு கடன் பெற்றுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக் குழு மூலம் அவரது மனைவி முத்தூட், உஜ்ஜிவன், ஐடிஎப்சி, கிராம சக்தி, பெல்ஸ்டார் போன்ற பைனான்ஸ் தனியார் நிதி நிறுவனங்களில் மூலம் ஐந்து லட்ச ரூபாய் வரை கடன் பெற்று விசைத்தறி தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விசைத்தறி தொழில் நழிவடைந்த வேலை இல்லாத காரணத்தால் மேற்கொண்டு கடனை கட்ட முடியாமல் ஞானசேகரன் குடும்பத்தினர் திணறி உள்ளனர். கடன் கொடுத்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்களோ ஞானசேகரனை வட்டி மற்றும் அசலை கட்டச் சொல்லி பகல் இரவென்று பாராமல் பல்வேறு விதத்தில் அவரை துன்புறுத்தி உள்ளனர்.

இதனை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான ஞானசேகரன் தமிழக முதல்வர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

RELATED ARTICLES

Recent News