ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான திரைப்படம் தர்பார். நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்தனர். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களால் படுதோல்வி அடைந்தது.
கடந்த மூன்று வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்காத ஏஆர் முருகதாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில், ‘தர்பார்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை மனம் திறந்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது ” தர்பார் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு பிப்ரவரி மாதம் கிடைத்தது. அன்றைய சூழ்நிலையில் அந்தப் படம் தான் ரஜினி சாரின் கடைசிப் படம் என்றும், ஆகஸ்ட் மாதம் அவர் கட்சி தொடங்குவர் என்றும் பேசப்பட்டது. நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அவரை இயக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக மார்ச் மாதத்தில் ஷுட்டிங் ஆரம்பித்தோம். சரியான திட்டமிடல் இல்லாததால் படம் தோல்வி அடைந்து விட்டது” என அவர் கூறியுள்ளார்.