தொழில்துறை அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவியேற்றுள்ளார்..அப்போ நிதித்துறை யாருக்கு??

திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அமைச்சரவையின் புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவியேற்றுள்ளார். அவருக்கு தொழித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர், அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை மாற்றமின்றி 35 ஆக நீடிக்கிறது.

RELATED ARTICLES

Recent News