கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியதால்தான் நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ரஜினிகாந்த் நான் அரசியல் பணியில் ஈடுபடும்போது கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டது. இந்த சமயத்தில் வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கப்படும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியே சென்றால் என் முககவசத்தை கழற்ற வேண்டியிருக்கும். சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் இயலாத காரியம். இதை எப்படி மக்களிடம் சொல்வது என்ற யோசனையில் இருந்தேன்.
ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நானே விளக்கம் கொடுக்கிறேன் என்று மருத்துவர் சொன்னார். அதன்பிறகு தான் அரசியலில் இருந்து விலகுவதாக நான் அறிவித்தேன் என தெரிவித்தார்.