நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் பயணச்சீட்டு எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சீருடை அணியவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, நோ என்ட்ரி, நிறுத்த கோட்டை தாண்டி நிறுத்துதல் உட்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவதாக அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீசார் நேற்று முதல் அபராதம் விதித்து வருகின்றன.