தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் “கமல்ஹாசன்”.. உலகநாயகன் என்று இவருக்கு பட்டம் வழங்கப்பட்டிருந்தாலும் ரசிகர்கள் இவரை ஆண்டவர் என்று அன்போடு அழைப்பார்கள். “அம்மாவும் நீயே., அப்பாவும் நீயே அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே..” எனப்பாடி சிறு வயதிலேயே சினிமாவில் கால் பதித்தவர் கமல்ஹாசன். பின்னர் ஹீரோவாக என்ட்ரி ஆகி பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்., அந்த காலத்தில் அபூர்வ சகோதரகர்கள், அவ்வை சண்முகி, சகலகலா வல்லவன் என ஆரம்பித்து தற்போது விக்ரம் படம் வரை பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்..
சினிமாவிற்கு என்றே தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொண்டு வாழும் நடிகர்களில் கமல்ஹாசனும் ஒருவர். குறிப்பாக இவர் நடிக்கும் படங்களில் இவர் மாறுவேடங்களில் நடிப்பதும் உண்டு அப்படி நடிக்கப்படும் படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுப்பதோடு அந்த கதாப்பாத்திரமாகவே இவர் வாழ்ந்துள்ளார் என சொல்லும்படியாக அந்த கெட்டப் அமைந்திருக்கும்..
உதாரணத்திற்கு அவ்வைசண்முகி, தசாவதாரம் போன்ற படங்கள். இதுவரையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்..? அடுத்த தளபதி யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளதே தவிர அடுத்த உலகநாயகன் யார் என்ற கேள்வி எழாதது இவரின் நடிப்பின் பெருமையை குறிக்கிறது.
சினிமாவில் ஹீரோவாக நடித்து வருவதோடு ராஜ்கமல் ப்ரோடெக்ஷன் மூலம் பல படங்களையும் இயற்றி வருகிறார்., ஒரு சில படங்களில் இவரே பாடல் எழுதி அதை பாடியும் இருக்கிறார்., குறிப்பாக டெக்னலாலஜி அப்டேட்கள் வரவர இவரது படங்கள் ஒவ்வொன்றிலும் அந்த டெக்னாலாஜியை பயன்படுத்தி இருப்பார்., தற்போது கூட வெளிநாடுகளுக்கு சென்று AI கற்று கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இப்படி நடிப்பின் நாயகனாக வாழ்ந்து வரும் கமல்ஹாசனுக்கு இதுவரையில் எத்தனை விருதுகள் கிடைத்து இருந்தாலும் இந்த விருது பெருமைக்குரியது என சொல்லலாம். அதாவது ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ள நிலையில் அதில் மெம்பராக இணைவதர்க்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 534 உறுப்பினர்கள் இதில் இருக்கின்ற நிலையில், அவர்கள் ஆஸ்கர் ரேஸில் இறுதி வாக்கெடுப்பில் பங்கேற்று வெற்றியாளர்களை தீர்மானம் செய்வார்கள். இந்த கவுரவ பட்டமானது கமல்ஹாசனுக்கு மட்டுமின்றி பாலிவுட் நடிகர் ஆயுஷ்மாஅன் குரோனாவிற்கும் வழங்கப்படவுள்ளது.
களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி., சினிமாவில் நிக்காமல் சாதித்து கொண்டிருக்கும் கமல்ஹாசனுக்கு இந்த பட்டம் வழங்கப்பட இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் – கலைஞானி கமல்ஹாசனுக்கு அவர்களுக்கு என் வாழ்த்துகள்.. மொழி – தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்..