பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி..!

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மாங்காடு மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகணபதி இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த புகார் மனுவில், “மாங்காடு மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆய்வுக் கூடம்’ திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு நஷ்டஈடாக ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

பிச்சைக்காரன் -2 படத்திற்கும் ஆய்வுக்கூடம் படத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை எனவும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் விஜய் ஆண்டனி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிச்சைக்காரன் -2 திரைப்படம் வருகிற மே 19ம் தேதி வெளியாகவுள்ளது.

RELATED ARTICLES

Recent News