தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..!! அலார்ட் மக்களே..!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தும்., அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்குதிசை வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும்.,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.. என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற 19ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அறிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் ஒரு சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும்., குறைந்தபட்ச வெப்பநிலை வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News